பணம்னா யாருக்கு வேண்டாம்? ஆனா….

எனக்குத் தெரிந்தவர்.. வயது ஐம்பதைத் தொடும். ரொம்பச் சின்ன வயசுலேயே அரசுப் பணியில் சேர்ந்து , இப்போது ஏதோ ஒரு துறையில் மிக மூத்த அதிகாரி. இருந்தது முழுக்க உள்ளாட்சி / வருவாய்த்துறை துறை. ரியல் எஸ்டேட்டுக்காரகளும் வியாபாரிகளும் கொண்டு வந்து கொட்டுவார்கள். ஆனால் நம்ம அண்ணனுக்குக் கொஞ்சம் கை சுத்தம். அதனால் டயரி, பால்பாய்ண்ட் பேனா தவிர வேறு எதையும் பெற்றுக் கொள்ள மாட்ட்டார். நட்பு வட்டாரங்களில், பணி நேர்மை, கடுமையான உழைப்பு ஆகியவ்ற்றுக்கு அவரை உதாரண புருஷராகச் சொல்வார்கள். சமீபத்தில் மிகப் பெரிய பதவி உயர்வு வந்தது. இதே ரேஞ்சில் போட்டு மிதித்தார் என்றால், இன்னும் ஒரு சில வருடங்களில் பெரிய பதவியில் ரிட்டையர் ஆவார்.

அவருடைய சக ஊழியர்கள் எல்லாரும் பெருசாகப் பதவி உயர்வு இல்லையென்றாலும், மெடிக்கல் சீட்டு,. ஓரகடத்தில் ப்ளாட்டு, நகைகள் என்று ‘வளமாக’ இருந்தார்கள். அண்ணனுடைய வீட்டுக்காரம்மாவுக்கு இதிலே லேசாக மனவருத்தம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அவர்களை அதிகமாகப் பழக்க்கம் இல்லை.

சமீபத்தில் அவரைச் சந்தித்த பொழுது, இதைப் பற்றியெல்லாம் பேசிக் கொண்டிருந்தார்.

எழுபதுகளில் இறுதியில் தற்காலிகமாக சென்சஸ் துறையில் நாள் கூலியாக வேலைக்குச் சேர்ந்தது. அப்போது அதிக அளவு மெஜாரிட்டியுடன் ஆட்சியைப் பிடித்த எம்ஜிஆர் ( முந்தைய ஆட்சியைக் கவிழ்த்த கோபத்தில் மக்கள் கொல குத்து குத்தியிருந்தார்கள்) , ஒரு உற்சாகமான மூடிலே தற்காலிகப் பணியாளர்கள் பலரை எந்தக் கணக்கு வழக்குமில்லாமல் நிரந்தர ஊழியர்களாக்கியது, அதன் மூலம் அரசிலே ஜுனியர்ர் அஸிஸ்ட்டெண்டாக வேலை கிடைத்து, மேலதிகாரி என்ன சொன்னாலும் சிரமேற்கொண்டு செய்து முடித்தது, உள்ளாட்சித்துறை அடைந்த மாற்றங்கள், லஞ்ச ஊழலில் மாட்டிக் கொண்டு கைதான நண்பர்கள், மாட்டிக் கொள்ளாமல் மல்டி மில்லியனராக வலம் வரும் சில குமாஸ்தாக்கள் என்று சுவாரசியமாகப் பேச்சு நீண்டு, பிள்ளைகள் படிப்புச் செலவு, மருத்துவச் செலவு… கடன் தொல்லை என்று cash flow பிரச்சனையில் வந்து நின்றது.

” அது எப்படிண்ணா இப்படிப் பணங்கொட்டற டிப்பார்ட்மெண்ட்ல இருந்துகிட்டு … கொஞ்சம் கூட சபலப்படாம.. நீ கேக்கலைன்னாகூட வந்து குடுத்துடுவாங்களே…?ஆனா எனக்குத் தெரியும் நீ அவ்ளோ உத்தமன்லாம் இல்லைன்னு …எக்ஸாக்டா என்ன பிரச்சனை?

கொஞ்ச நேரம் மௌனமாக இருந்தார். பிறகு சொன்னார்.

” பணம்னா யாருக்கு வேண்டாம்? எனக்கும் ஆசைதான்… கை நீட்டி வாங்கிட்டு… அப்பறம் மாட்டிக்கிட்டா என்ன பண்றதுன்னு பயம்… அதான் சர்வீஸ் முழுக்க நல்லவனாவே இருந்துட்டேன்…

ஆகவே, இசைஞானி அவர்களே,

Image Source : http://nishusworld.blogspot.in/
Image Source : http://nishusworld.blogspot.in/

தலைமுறைகள் படத்தைப் பார்த்துவிட்டு ஒரு அன்பர், படத்துக்கு இசை அமைத்திருந்த இளையராஜாவை, இந்த மாதிரியான ஒரு ஆஸ்கார் ரேஞ்சு படத்துக்கு இப்படியா பருப்பில்லாமல், சாரி, பொறுப்பில்லாமல் இசை அமைப்பீர்கள் என்று அதட்டியதோடு மட்டுமல்லாமல், “Please, take some rest ilayaraja sir, i am waiting for you” என்று present continous tense இலே பழியாகக் காத்துக்கிடக்கிறார்.

ஆகவே, இசைஞானி அவர்களே,

அடுத்த படத்திலாவது, கீபோர்டு, கிட்டார், வயலின், தபலா ஆகிய இசைக்கருவிகளுடன், பொறுப்பு என்ற இசைக்கருவியையும் ஆர்க்கெஸ்ட்ராவில் சேர்த்துக் கொண்டு இசை அமைத்து தமிழ்ச்சினிமா இசையை வீனஸ், மார்ஸ், ஜூபிடர் ப்ளுட்டோ கிரகங்களுக்குக் கொண்டு செல்ல ஓயாது உழைத்துக் கொண்டிருக்கும் நண்பரையும் அவரது *லைக்கர்களையும்* மன உளைச்சலிலிருந்து காப்பாற்றி அருளவும்.

ஏன்னா, இதுக்கெல்லாம் இன்சூரன்ஸ் கவரேஜ் கிடையாதாம்.

டி.ராஜேந்தர் என்கிற இசையமைப்பாளர்..

image source : http://anikartick.blogspot.in/
image source : http://anikartick.blogspot.in/

ஏ.ஏ.ராஜ் ஒரு தலைராகத்தின் ஒரு சில பாடல்களுக்கு இசை அமைத்தார். ( எந்தப் பாடல்களுக்கு என்று யாருக்கும் தெரியாது) அந்தப் படத்தின் மூலமாகக் கிடைத்த வெற்றியைத் தக்க வைத்துக் கொள்ளத் தெரியவில்லை. பின்னர் அவருக்கு இசை அமைக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. கிடைத்த ஒரே படம் தணியாத தாகம். அந்தப் படமும் ரிலீஸ் ஆகவில்லை. ஒரு பாடல் நன்றாக இருக்கும் ( சிலோனில் நானே பலமுறை கேட்டுருக்கிறேன்) அவ்வளவுதான். ஒருவேளை பல படங்களுக்கு இசை அமைக்க வாய்ப்பு கிடைத்திருந்தால் எம்எஸ்வி, ராஜா, ரகுமான் ரேஞ்சுக்கு இருந்திருக்குமா அல்லது சங்கர் கணேஷ், சந்திரபோஸ் லெவவில் இருந்திருக்குமா தெரியாது. வெறுமனே இந்தத் தகவல்களை மட்டும் வைத்துக் கொண்டு,

சின்னச் சின்னக் கண்ணா ( கிளிஞ்சல்கள்), ஜூலி ஐ லவ் யூ ( கிளிஞ்சல்கள்)., அமைதிக்குப் பெயர்தான் சாந்தி, வசந்த காலங்கள் இசைந்து பாடுங்கள், வசந்தம் பாடிவர ( இரயில் பயணங்களில்), கதிரவனைப் பார்த்து பூக்கள் விடும் தூது, மூங்கில் காட்டோரம் ( பூக்கள் விடும் தூது), நெஞ்சம் பாடும் புதிய ராகம் ( நெஞ்சில் ஒரு ராகம்), தினம் தினம் உன் முகம், தங்க நிலவே உன்னை உருக்கி ( தங்கைக்கோர் கீதம்), எந்தன் பாடல்களில் ஒரு ( உறவைக் காத்த கிளி)., இதயம் அதைக் கோயில் என்பேன், இந்திர லோகத்து சுந்தரி ராத்திரி, வைகைக்கரை காற்றே நில்லு ( உயிருள்ளவரை உஷா), எங்கும் மைதிலி எதிலும் மைதிலி, கண்ணீரிலே மீனழுதால், நானும் உந்தன் உறவை, பொன்மானை நான் காண ( மைதிலி என்னைக் காதலி), மாலை எனை வாட்டுது, சோலைகெள்ளாம் பூக்களைத் தூவி ( பூக்களைப் பறிக்காதீர்கள்), எனது கானம் உன் காதில் விழவில்லையா, சொல்லாமத்தானே ( ஒரு தாயின் சபதம்), தோள்மீது தாலாட்ட (என் தங்கை கல்யாணி), உயிரே வா, காதலே காதலே ( மோனிஷா என் மோனாலிசா), வாழ்க்கை ஒரு கண்ணாமூச்சி ( கூலிக்காரன்),

போன்ற காலத்தால் அழியாப் பாடல்களை தொடர்ந்து தந்து, தனது முதல் வெற்றி தற்செயலானதில்லை இருபது ஆண்டுகளுக்கும் மேலாக நிரூபித்த பல்கலை வித்தகர் டி.ராஜேந்தரை, ( டி.ஆருக்கு படைப்பாளிகளுக்கு உரித்தான கிறுக்குத்தனம் சற்றே அதிகம் என்ற காரணத்தால்) அலட்டல் பேர்வழிஏன்று ஒரே வார்த்தையில் ஒதுக்கி, அவரது அத்தனை சாதனைகளையும் குப்பைக்கூடையில் தள்ள, ஜெயமோகன் சார் அவர்களால் மட்டும் தான் முடியும்.

http://www.jeyamohan.in/?p=42900

ஏர்டெல் சூப்பர் சிங்கரும் மிசுகினும்….

இளையராஜா ரவுண்டு என்பதால் ரெண்டு நாளாக ஏர்டெல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். நேற்றைய நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக மிஷ்கின் வந்திருந்தார். பாவனா ஜாலியாக வரவேற்றுப் பேச, மகாபா ஆனந்த் மட்டும் மம்மியை கண்ட மந்திரி மாதிரி பம்மினார். பேசும் பொழுது கொஞ்சம் அதிகப்படியான பயபக்தி. ஓ.நா.ஆ.கு படத்தை critically acclaimed என்று பாவனா குறிப்பிட, மிஷ்கின் சட்டென்று குறுக்கிட்டு

” அதல்லாம் இல்லை, அப்பறம் இது ஜோல்னாப் பையர்களுக்கான படம்னு நினைச்சுக்கப் போறாங்க… இது ஒரு சாதாரணமான திரில்லர் படம் .. என்ன குத்துப்பாட்டு மட்டும் கிடையாது”

என்றார்.

மிஷ்கின்,இந்த ஞானம் உங்களுக்கு கொஞ்சம் முன்னாலேயே வந்திருக்கலாம். அடுத்த படத்துல கொஞ்சம் பாத்துகிடுங்க, ப்ளீஸ்

ஆமாம். நிகழ்ச்சி நடக்கையிலே, இளையராஜா மீதான தன்னோட பக்தி, காதல் பத்தியெல்லாம் நிறையப் பேசினார். அப்படிப் பேசறப்ப சீனியண்ணன் எக்ஸ்பிரஷன் எல்லாம் பார்க்கணுமே…செம காமெடி. இருக்காதா பின்னே?