
ஏ.ஏ.ராஜ் ஒரு தலைராகத்தின் ஒரு சில பாடல்களுக்கு இசை அமைத்தார். ( எந்தப் பாடல்களுக்கு என்று யாருக்கும் தெரியாது) அந்தப் படத்தின் மூலமாகக் கிடைத்த வெற்றியைத் தக்க வைத்துக் கொள்ளத் தெரியவில்லை. பின்னர் அவருக்கு இசை அமைக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. கிடைத்த ஒரே படம் தணியாத தாகம். அந்தப் படமும் ரிலீஸ் ஆகவில்லை. ஒரு பாடல் நன்றாக இருக்கும் ( சிலோனில் நானே பலமுறை கேட்டுருக்கிறேன்) அவ்வளவுதான். ஒருவேளை பல படங்களுக்கு இசை அமைக்க வாய்ப்பு கிடைத்திருந்தால் எம்எஸ்வி, ராஜா, ரகுமான் ரேஞ்சுக்கு இருந்திருக்குமா அல்லது சங்கர் கணேஷ், சந்திரபோஸ் லெவவில் இருந்திருக்குமா தெரியாது. வெறுமனே இந்தத் தகவல்களை மட்டும் வைத்துக் கொண்டு,
சின்னச் சின்னக் கண்ணா ( கிளிஞ்சல்கள்), ஜூலி ஐ லவ் யூ ( கிளிஞ்சல்கள்)., அமைதிக்குப் பெயர்தான் சாந்தி, வசந்த காலங்கள் இசைந்து பாடுங்கள், வசந்தம் பாடிவர ( இரயில் பயணங்களில்), கதிரவனைப் பார்த்து பூக்கள் விடும் தூது, மூங்கில் காட்டோரம் ( பூக்கள் விடும் தூது), நெஞ்சம் பாடும் புதிய ராகம் ( நெஞ்சில் ஒரு ராகம்), தினம் தினம் உன் முகம், தங்க நிலவே உன்னை உருக்கி ( தங்கைக்கோர் கீதம்), எந்தன் பாடல்களில் ஒரு ( உறவைக் காத்த கிளி)., இதயம் அதைக் கோயில் என்பேன், இந்திர லோகத்து சுந்தரி ராத்திரி, வைகைக்கரை காற்றே நில்லு ( உயிருள்ளவரை உஷா), எங்கும் மைதிலி எதிலும் மைதிலி, கண்ணீரிலே மீனழுதால், நானும் உந்தன் உறவை, பொன்மானை நான் காண ( மைதிலி என்னைக் காதலி), மாலை எனை வாட்டுது, சோலைகெள்ளாம் பூக்களைத் தூவி ( பூக்களைப் பறிக்காதீர்கள்), எனது கானம் உன் காதில் விழவில்லையா, சொல்லாமத்தானே ( ஒரு தாயின் சபதம்), தோள்மீது தாலாட்ட (என் தங்கை கல்யாணி), உயிரே வா, காதலே காதலே ( மோனிஷா என் மோனாலிசா), வாழ்க்கை ஒரு கண்ணாமூச்சி ( கூலிக்காரன்),
போன்ற காலத்தால் அழியாப் பாடல்களை தொடர்ந்து தந்து, தனது முதல் வெற்றி தற்செயலானதில்லை இருபது ஆண்டுகளுக்கும் மேலாக நிரூபித்த பல்கலை வித்தகர் டி.ராஜேந்தரை, ( டி.ஆருக்கு படைப்பாளிகளுக்கு உரித்தான கிறுக்குத்தனம் சற்றே அதிகம் என்ற காரணத்தால்) அலட்டல் பேர்வழிஏன்று ஒரே வார்த்தையில் ஒதுக்கி, அவரது அத்தனை சாதனைகளையும் குப்பைக்கூடையில் தள்ள, ஜெயமோகன் சார் அவர்களால் மட்டும் தான் முடியும்.