இளையராஜா ரவுண்டு என்பதால் ரெண்டு நாளாக ஏர்டெல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். நேற்றைய நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக மிஷ்கின் வந்திருந்தார். பாவனா ஜாலியாக வரவேற்றுப் பேச, மகாபா ஆனந்த் மட்டும் மம்மியை கண்ட மந்திரி மாதிரி பம்மினார். பேசும் பொழுது கொஞ்சம் அதிகப்படியான பயபக்தி. ஓ.நா.ஆ.கு படத்தை critically acclaimed என்று பாவனா குறிப்பிட, மிஷ்கின் சட்டென்று குறுக்கிட்டு
” அதல்லாம் இல்லை, அப்பறம் இது ஜோல்னாப் பையர்களுக்கான படம்னு நினைச்சுக்கப் போறாங்க… இது ஒரு சாதாரணமான திரில்லர் படம் .. என்ன குத்துப்பாட்டு மட்டும் கிடையாது”
என்றார்.
மிஷ்கின்,இந்த ஞானம் உங்களுக்கு கொஞ்சம் முன்னாலேயே வந்திருக்கலாம். அடுத்த படத்துல கொஞ்சம் பாத்துகிடுங்க, ப்ளீஸ்
ஆமாம். நிகழ்ச்சி நடக்கையிலே, இளையராஜா மீதான தன்னோட பக்தி, காதல் பத்தியெல்லாம் நிறையப் பேசினார். அப்படிப் பேசறப்ப சீனியண்ணன் எக்ஸ்பிரஷன் எல்லாம் பார்க்கணுமே…செம காமெடி. இருக்காதா பின்னே?