[ இந்து ஆசிரியர் கைது செய்யப்பட்ட பொழுது, பா.ராகவன் எழுதிய ;கருப்பு வெள்ளிக்கிழமை என்க்ற கட்டுரைக்கான எதிர்வினை இது ]
ஒரு சின்ன திருத்தம்.
அது படுதலம் சுகுமாரன் எழுதிய ஜோக்கில்லை. பூங்கோதை எழுதியது.
அந்த ஜோக்,
“அங்கே மேடையிலே உட்கார்ந்திருக்கறதுலே, யார் எம்.எல்.ஏ ? யார் மந்திரி?”
” பிக்பாக்கெட் மாதிரி இருக்கிறது எம்.எல்.ஏ. கொள்ளைக்காரன் மாதிரி இருக்கிறது
மந்திரி”
இப்போது சிரிப்பே வராத இந்த ஜோக்குக்காகத்தான் ஆசிரியர் கைது செய்யப்பட்டு, பின், அவர் அரசு மேல்வழக்கு தொடர்ந்து, வெற்றி பெற்று, கிடைத்த சொற்ப பணத்தை அவரது அலுவலகத்தில் ·ப்ரேம் போட்டு மாட்டிவைத்திருக்கிறார்கள் என்று சொல்வார்கள்.
பத்திரிக்கை உலகின் மீது கையை வைத்தால், அவ்வளவுதான் என்று உதார் விடுவதெல்லாம் இப்போதைக்குசும்மாதான். டெஸ்மா நினைவிருக்கிறதா ? ஒண்ணும் பண்ண முடியாது. வழக்கு போட முடியும். போட்டு , பிறகு?வழக்கு வாய்தா, அரஸ்ட்டு வாரண்டு என்றால் நெஞ்சு வலி, ரிக்கார்ட் டான்ஸ், ஆள் வைத்து அடிப்பது…. ஒண்ணும்செய்ய முடியாது.
சென்னைவாசிதானே நீங்கள்? தினசரி பேப்பர் வாசிப்பவர்தானே? அப்படியானால் தெரிந்திருக்குமே?
அடிப்படையில் தவறு செய்தது நீங்களும் நானும் .
திருடனுக்கு ஓட்டுப் போடுவதா, பிக்பாகெட்டுக்கு ஓட்டு போடுவதா என்று மகா கனம் பொருந்திய ஸ்ரீலஸ்ரீசோ.ராமஸ்வாமியனந்தா சுவாமிகள் கேட்ட போது, பிக்பாக்கெட் என்று நினைத்து &*&*&*& க்கு ஓட்டுபோட்டது நீங்களும் நானும். இப்போது பத்திரிக்கை காரன் மீது கை வைத்தால், கேட்க என்ன உரிமை?
ஜெயலலிதா பதவி விலக வேண்டும். நீதி மன்றத் தீர்ப்பு. பால் தக்காரேவே தோற்றுப் போகும் அளவுமிகத் திறமையாக ரிமோட்டை இயக்கி, அரசு என்ற இயந்திரத்தை கேலி செய்த போது, இந்துவோ அல்லது,பா. ராகவனோ என்ன செய்து கொண்டிருந்தார்கள்? அந்த ‘ நான் வெறும் ரிப்போர்ரட் மட்டுமே’ என்றவிட்டேத்தித் தனம் தானே இந்த நிலைக்கு கொண்டு வந்து விட்டிருக்கிறது?
என்ன சகோதர பாசமா?
ஆட்சி அமைச்சாங்க. கொஞ்ச நாள்ளே ஆட்சி போச்சு. ஆட்சி கிடைக்க என்ன செய்ய வேண்டும்? கோவைவேளாண்மை பல்கலைகழக மாணவிகளை பஸ்ஸிலே உயிரோடு வைத்துக் கொளுத்த வேண்டும். பதவி மீண்டும்கிடைத்ததா இல்லையா?ஆளுங்கட்சியின் இந்த தீர்க்க தரிசனம் பற்றி நான்கு நாள் தொடர்ந்த ரிப்போர்ட்டிங்தவிர வேற ஏதாவது? அந்த செயலுக்கு கண்டனம் செய்து, ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களைப் பற்றிய செய்தி?டிரஸ்ட் அமைத்து அந்த குடும்பத்துக்கு நிதி திரட்டி தந்த ‘ தமிழம்’ ( இதிலே .ஐயா இராம.கிதொடர்புடையவர் என்று நினைக்கிறேன்.) என்ற அமைப்பினைப் பற்றி எங்காவது மாஸ் மீடியாவிலே செய்திஒன்றை காட்டிடுங்கள் பார்ப்போம்?
மணி சங்கர் ஐயரை ஆள் வைத்து அடிப்பார்கள். ஆனால் அதை பற்றி செய்தி சொல்லும் போது, மட்டும், it is alleged மற்றும் reportedly என்ற tag உடன் வரும். ஆனால் இது மட்டும் mis-adventure என்றுஅடித்துச்சொல்கிறார் என்.ராம்.
அடித்துச் சொல்கிறேன். ஒன்றும் நடக்காது. வழக்குகள் வாபஸ் ஆனாலும், பிச்சை போடுகிறார் போலத்தான்அதைசெய்வார். ஹிந்து டெ·பமேஷன் சூட் போட்டாலும், ஒன்றும் நடக்காது.ஆஜ்தக் நிருபர் ஜெயஸ்ரீ மேட்டர் என்னாச்சு?சன்டிவி நிருபர் தாக்கப்பட்ட வழக்கு என்னாச்சு? ஓட ஓடவிரட்டியடிக்கப் பட்ட கே.பி சுனிலின் தற்போதையபுகுந்த வீடு எங்கே? ( அவர் புத்திசாலி
)
சுரேஷ், என் கேள்விகளுக்கு ஏன் பதில் இல்லை என்று நீங்கள் கேட்டதற்கு ஹரியண்ணா சொன்ன
பதிலைபார்த்தீர்கள் இல்லையா? இதை விட பெரிசாக ஒன்று வந்தால் முன்னது அமுங்கி விடும். இதே தத்துவம்தான்பத்திரிக்கைகளுக்கு.
என்ன, கோபாலுக்கு நடத்திய கூட்டம் போல, இதுக்கும் பத்திரிக்கையாளர்கள் கூட்டம் நடத்தலாம். அல்லதுஇன்டெலிஜென்ஸ் டிபார்மெண்ட்டின் இன்·பில்ட்ரேஷன் பற்றிய பயத்தால் கூட்டம் நடக்காது போகலாம்.வீரபாண்டியன் நேருக்கு நேர் வைத்து ஆளுங்கட்சியுடன், எப்போதோ ஒரு முறை தொடர்பு கொண்டிருந்த ஒருத்தரைபோட்டு வறுத்தெடுக்கலாம். ஓ… ஹிந்து தேசிய நாளிதழ் இல்லை? அப்படியானால், பிக்·பைட்டிலும் நிச்சயம்அதற்கு இடம் உண்டு. 24 X 7 சானலின் டி.ஆர்.பி ரேட்டு ஏறி, கோல்கேட் பேஸ்ட்டும் , வெர்ஸா காரும்,சானிட்டரி நாப்கின்களும் அதிகம் விற்பனை ஆகும்.
இது அராஜகம் என்று டெல்லியில் இருந்து குரல் கொடுக்கும் இல. கணேசன், கூட்டணி பற்றிய பேச்சு வரும்போது, இதை நினைவில் வைத்திருப்பாரா?
இது ஒரு புறம் இருக்க, இன்னொருத்தர் மனித சங்கிலி நடத்தி, அடுத்த ஆட்சிக்கான அஸ்திவாரத்தைதோண்டுவார். டான்சி தீர்ப்பு வந்தால், அந்த சங்கிலி பலப்படும். சில்லுண்டிக் கட்சிகளுடன் பேரம் துவங்கும்.நீங்கள் குத்தப் போகும் ஓட்டுக்காக அவர்கள் சண்டை போட்டுக் கொள்வார்கள். நீங்களும் வெறுங்கழகத்துக்கோ, ஸ்பெஷல் கழகத்துகோ ஓட்டுப் போடப் போகிறீர்கள். திரும்பவும் யாரவது ஆட்சிக்கு வந்து ஒருசனிக்கிழமை அன்று சேகர் குப்தாவையோ, மாலனையோ , ஏதாவது காரணம் சொல்லி கைது செய்தால், வேறுயாராவது கருப்பு சனிக்கிழமை என்று கட்டுரை எழுதுவார்கள். ஏன் ராகவனே கூட எழுதலாம்.
மிஸ்டர். ராகவன், என் கோபம் உங்கள் மீது அல்ல. எனக்கு அநியாயம் என்றால் மட்டும் உடனடியாக ஓங்கிகுரல் கொடுப்பேன். ஆனால், மற்ற விஷயங்களில் ஆராய்ந்து பார்த்து, நடு நிலைமையுடன் யோசித்து, தீரஆராய்ந்து, உண்மை நிலை என்ன வென்று அறிந்த பின், எனக்கு மூடு இருந்தால் மட்டுமே நான் எழுதுவேன் என்றநிலைப்பாட்டின் மீது மட்டுமே. அதுவும், பத்திரிகை உலகப் பிரதிநிதி என்றபடியால் தான் இந்தகேள்விகளை , ஐயங்களை உங்கள் முன் வைக்கிறேன்.
(ரா.காகிக்கு இத்தனை தூரம் அரசியல் ஆகாது என்பதால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன். அல்லது யாராவது
அவர்கள் பிளாகிலே இடம் கொடுத்தால் எழுதுகிறேன் )
Nov 8, 2003