Prakash’s Chronicle 2.0

‘RKK’ பகுப்பில் உள்ள வரவுகள்

Hardware X Software

செப்டம்பர் 30, 2008 · 4 மறுமொழிகள்

[ஐந்து வருடங்களுக்கு முன்பு, குறிப்பாக நவம்பர் 2003 இலே ராகாகி குழுமத்தில் எழுதியது]

ம்மா, எத்தனை தரம் சொன்னாலும் கேக்க மாட்டியா? இந்த பெண் பார்க்கிற பிசினஸ் எல்லாம் வேண்டாம்..

அப்படி சொன்னா எப்படிடா ரங்கா? பொண்ணு பாக்காமே எப்படி கல்யாணம் செய்யறது.

அதல்லாம் வேண்டாம். நீயும், அப்பாவும் போய்ப் பாருங்க. கூட வேணா சியாமளாவை கூட்டிக்கோ. வந்து பாத்துட்டு ஓகேன்னா சொல்லு. நான் பண்ணிக்கிறேன். தலைக்கு மேல வேலை இருக்கு. டிஸ்டர்ப் பண்ணாதே.

சரிடா.

0

என்னடி, திருச்சிலேந்து போன் வந்துது போல இருக்கே. என்ன சொல்றாங்க?

அவங்க கைக்கு அஸ்வின் ஜாதகமும் போயிருங்குங்க. அஸ்வினையே முடிக்கலாம்னு அபிப்ராயப் படறாங்க போல இருக்கு. நம்ம பையன் வேலை வேற ஒரு சிக்கல்.

யாரது அஸ்வின்? நம்ம சம்மந்தியோட, அக்கா பையனா? அமெரிக்காலே இருந்தானே அவனா? அவன் இப்ப மெட்ராஸ்லே வேலைன்னா தேடிக்கிட்டு இருக்கான்? ஆனா பத்து பேருக்கு வேலை குடுக்கறாண்டி நம்ம சிவில் எஞ்சினியர். இவன விட அவன் ஒசத்தியா?

ஆமாம். அவனுக்கு வேலையில்லேனாலும் அவன் சா·ப்ட்வெர் தான். உங்க புள்ளே மொதலாளின்னாலும் உள்ளூர்லே மேஸ்திரி வேலைதான்

பகுப்புகள்: RKK · Summa

ஐயர், ஐயரின் சம்சாரம் மற்றும் அபர்ணா சென்.

நவம்பர் 21, 2003 · கருத்துத் தெரிவிக்கவும்

நல்ல பரபரப்பாக பேசப் பட்ட மிஸ்டர் & மிசஸ் ஐயர் என்ற்
அபர்ணா சென்னின் cross-over படத்தை சமீபத்தில் தான்
பார்க்கக் கிடைத்தது. முதலிலே தோன்றியது, அபர்ணா சென்
என்கிற அந்த வங்க டைரக்டர் இத்தனை அருமையாக
படம் எடுப்பாரா என்பதுதான். நடிக நடிகையர் தேர்வு, ஒளிப்பதிவு
பின்னணி இசை, சாகீர் உசைனின் குரலில் ஒரு பாடல், மூன்று
மொழிகள் இருந்தாலும், ஹேராம் போல குழப்பாமல் இருந்தது
என்று பார்த்து பார்த்து செதுக்கியிருக்கிறார்.

ஒரு கலவரத்தின் போது, தன் குழந்தையுடன் பயணம் செய்யும்
ஒரு தமிழ்ப் பெண், கூட பயணிக்கும் ஒரு முஸ்லிமை, தன் கணவன்
என்று சொல்லி காப்பாற்றி, இருவரும் ஒழுங்காக ஊர் வந்து
சேர்வதுதான் கதை.

கதையின் அடிநாதம், இந்து-முஸ்லிம் மதக்கலவரத்தைப் பற்றியது
என்றாலும், ஒரு இடத்தில் கூட, பிரச்சார தொனி வராமல்
பார்த்துக் கொண்டிருக்கிறார், இயக்குனர்.

கோங்கனா சென், அச்சு அசலாக ஒரு தமிழ்ப் பெண்ணை கொண்டு
வந்து கண் முன் நிறுத்தியிருக்கிறார். அதே போல நாயகனாக வரும்
ராகுல் போஸ¤ம் தேர்ந்த நடிப்பு. சின்ன சின்ன கதாபாத்திரங்கள்
கூட மனதில் நிற்கின்றன. உதாரணமாக, பிக்னிக்கு வரும் இளவட்டங்கள்,
அந்த சினேகமான இன்ஸ்பெக்டர், உடைந்த இங்கிலீஷில் பேசும்
சௌகிதார் etc..

ரெண்டு வருஷத்துக்கு முன் வந்து, போன வருஷம் தேசிய விருதும் வாங்கிய
‘ஓல்ட் ·பில்ம்’ பற்றி ஏன் இத்தனை நீட்டி முழக்குகிறேன்?

வேற ஒண்ணும் இல்லை. எனக்கு அபர்ணா சென் இயக்கிய
மற்ற படங்கள் பற்றியும் யாராவது தகவல் குடுத்தால் தேவலை.
எனி வாலண்டியர்ஸ்?

பகுப்புகள்: Film Reviews · RKK · Vellithirai

karuppu veLLikkizamai

நவம்பர் 8, 2003 · கருத்துத் தெரிவிக்கவும்

[ இந்து ஆசிரியர் கைது செய்யப்பட்ட பொழுது, பா.ராகவன் எழுதிய ;கருப்பு வெள்ளிக்கிழமை என்க்ற கட்டுரைக்கான எதிர்வினை இது ]

ஒரு சின்ன திருத்தம்.

அது படுதலம் சுகுமாரன் எழுதிய ஜோக்கில்லை. பூங்கோதை எழுதியது.

அந்த ஜோக்,

“அங்கே மேடையிலே உட்கார்ந்திருக்கறதுலே, யார் எம்.எல்.ஏ ? யார் மந்திரி?”

” பிக்பாக்கெட் மாதிரி இருக்கிறது எம்.எல்.ஏ. கொள்ளைக்காரன் மாதிரி இருக்கிறது
மந்திரி”

இப்போது சிரிப்பே வராத இந்த ஜோக்குக்காகத்தான் ஆசிரியர் கைது செய்யப்பட்டு, பின், அவர் அரசு மேல்வழக்கு தொடர்ந்து, வெற்றி பெற்று, கிடைத்த சொற்ப பணத்தை அவரது அலுவலகத்தில் ·ப்ரேம் போட்டு மாட்டிவைத்திருக்கிறார்கள் என்று சொல்வார்கள்.

பத்திரிக்கை உலகின் மீது கையை வைத்தால், அவ்வளவுதான் என்று உதார் விடுவதெல்லாம் இப்போதைக்குசும்மாதான். டெஸ்மா நினைவிருக்கிறதா ? ஒண்ணும் பண்ண முடியாது. வழக்கு போட முடியும். போட்டு , பிறகு?வழக்கு வாய்தா, அரஸ்ட்டு வாரண்டு என்றால் நெஞ்சு வலி, ரிக்கார்ட் டான்ஸ், ஆள் வைத்து அடிப்பது…. ஒண்ணும்செய்ய முடியாது.

சென்னைவாசிதானே நீங்கள்? தினசரி பேப்பர் வாசிப்பவர்தானே? அப்படியானால் தெரிந்திருக்குமே?

அடிப்படையில் தவறு செய்தது நீங்களும் நானும் .

திருடனுக்கு ஓட்டுப் போடுவதா, பிக்பாகெட்டுக்கு ஓட்டு போடுவதா என்று மகா கனம் பொருந்திய ஸ்ரீலஸ்ரீசோ.ராமஸ்வாமியனந்தா சுவாமிகள் கேட்ட போது, பிக்பாக்கெட் என்று நினைத்து &*&*&*& க்கு ஓட்டுபோட்டது நீங்களும் நானும். இப்போது பத்திரிக்கை காரன் மீது கை வைத்தால், கேட்க என்ன உரிமை?

ஜெயலலிதா பதவி விலக வேண்டும். நீதி மன்றத் தீர்ப்பு. பால் தக்காரேவே தோற்றுப் போகும் அளவுமிகத் திறமையாக ரிமோட்டை இயக்கி, அரசு என்ற இயந்திரத்தை கேலி செய்த போது, இந்துவோ அல்லது,பா. ராகவனோ என்ன செய்து கொண்டிருந்தார்கள்? அந்த ‘ நான் வெறும் ரிப்போர்ரட் மட்டுமே’ என்றவிட்டேத்தித் தனம் தானே இந்த நிலைக்கு கொண்டு வந்து விட்டிருக்கிறது?

என்ன சகோதர பாசமா?

ஆட்சி அமைச்சாங்க. கொஞ்ச நாள்ளே ஆட்சி போச்சு. ஆட்சி கிடைக்க என்ன செய்ய வேண்டும்? கோவைவேளாண்மை பல்கலைகழக மாணவிகளை பஸ்ஸிலே உயிரோடு வைத்துக் கொளுத்த வேண்டும். பதவி மீண்டும்கிடைத்ததா இல்லையா?ஆளுங்கட்சியின் இந்த தீர்க்க தரிசனம் பற்றி நான்கு நாள் தொடர்ந்த ரிப்போர்ட்டிங்தவிர வேற ஏதாவது? அந்த செயலுக்கு கண்டனம் செய்து, ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களைப் பற்றிய செய்தி?டிரஸ்ட் அமைத்து அந்த குடும்பத்துக்கு நிதி திரட்டி தந்த ‘ தமிழம்’ ( இதிலே .ஐயா இராம.கிதொடர்புடையவர் என்று நினைக்கிறேன்.) என்ற அமைப்பினைப் பற்றி எங்காவது மாஸ் மீடியாவிலே செய்திஒன்றை காட்டிடுங்கள் பார்ப்போம்?

மணி சங்கர் ஐயரை ஆள் வைத்து அடிப்பார்கள். ஆனால் அதை பற்றி செய்தி சொல்லும் போது, மட்டும், it is alleged மற்றும் reportedly என்ற tag உடன் வரும். ஆனால் இது மட்டும் mis-adventure என்றுஅடித்துச்சொல்கிறார் என்.ராம்.

அடித்துச் சொல்கிறேன். ஒன்றும் நடக்காது. வழக்குகள் வாபஸ் ஆனாலும், பிச்சை போடுகிறார் போலத்தான்அதைசெய்வார். ஹிந்து டெ·பமேஷன் சூட் போட்டாலும், ஒன்றும் நடக்காது.ஆஜ்தக் நிருபர் ஜெயஸ்ரீ மேட்டர் என்னாச்சு?சன்டிவி நிருபர் தாக்கப்பட்ட வழக்கு என்னாச்சு? ஓட ஓடவிரட்டியடிக்கப் பட்ட கே.பி சுனிலின் தற்போதையபுகுந்த வீடு எங்கே? ( அவர் புத்திசாலி :-) )

சுரேஷ், என் கேள்விகளுக்கு ஏன் பதில் இல்லை என்று நீங்கள் கேட்டதற்கு ஹரியண்ணா சொன்ன
பதிலைபார்த்தீர்கள் இல்லையா? இதை விட பெரிசாக ஒன்று வந்தால் முன்னது அமுங்கி விடும். இதே தத்துவம்தான்பத்திரிக்கைகளுக்கு.

என்ன, கோபாலுக்கு நடத்திய கூட்டம் போல, இதுக்கும் பத்திரிக்கையாளர்கள் கூட்டம் நடத்தலாம். அல்லதுஇன்டெலிஜென்ஸ் டிபார்மெண்ட்டின் இன்·பில்ட்ரேஷன் பற்றிய பயத்தால் கூட்டம் நடக்காது போகலாம்.வீரபாண்டியன் நேருக்கு நேர் வைத்து ஆளுங்கட்சியுடன், எப்போதோ ஒரு முறை தொடர்பு கொண்டிருந்த ஒருத்தரைபோட்டு வறுத்தெடுக்கலாம். ஓ… ஹிந்து தேசிய நாளிதழ் இல்லை? அப்படியானால், பிக்·பைட்டிலும் நிச்சயம்அதற்கு இடம் உண்டு. 24 X 7 சானலின் டி.ஆர்.பி ரேட்டு ஏறி, கோல்கேட் பேஸ்ட்டும் , வெர்ஸா காரும்,சானிட்டரி நாப்கின்களும் அதிகம் விற்பனை ஆகும்.

இது அராஜகம் என்று டெல்லியில் இருந்து குரல் கொடுக்கும் இல. கணேசன், கூட்டணி பற்றிய பேச்சு வரும்போது, இதை நினைவில் வைத்திருப்பாரா?

இது ஒரு புறம் இருக்க, இன்னொருத்தர் மனித சங்கிலி நடத்தி, அடுத்த ஆட்சிக்கான அஸ்திவாரத்தைதோண்டுவார். டான்சி தீர்ப்பு வந்தால், அந்த சங்கிலி பலப்படும். சில்லுண்டிக் கட்சிகளுடன் பேரம் துவங்கும்.நீங்கள் குத்தப் போகும் ஓட்டுக்காக அவர்கள் சண்டை போட்டுக் கொள்வார்கள். நீங்களும் வெறுங்கழகத்துக்கோ, ஸ்பெஷல் கழகத்துகோ ஓட்டுப் போடப் போகிறீர்கள். திரும்பவும் யாரவது ஆட்சிக்கு வந்து ஒருசனிக்கிழமை அன்று சேகர் குப்தாவையோ, மாலனையோ , ஏதாவது காரணம் சொல்லி கைது செய்தால், வேறுயாராவது கருப்பு சனிக்கிழமை என்று கட்டுரை எழுதுவார்கள். ஏன் ராகவனே கூட எழுதலாம்.

மிஸ்டர். ராகவன், என் கோபம் உங்கள் மீது அல்ல. எனக்கு அநியாயம் என்றால் மட்டும் உடனடியாக ஓங்கிகுரல் கொடுப்பேன். ஆனால், மற்ற விஷயங்களில் ஆராய்ந்து பார்த்து, நடு நிலைமையுடன் யோசித்து, தீரஆராய்ந்து, உண்மை நிலை என்ன வென்று அறிந்த பின், எனக்கு மூடு இருந்தால் மட்டுமே நான் எழுதுவேன் என்றநிலைப்பாட்டின் மீது மட்டுமே. அதுவும், பத்திரிகை உலகப் பிரதிநிதி என்றபடியால் தான் இந்தகேள்விகளை , ஐயங்களை உங்கள் முன் வைக்கிறேன்.

(ரா.காகிக்கு இத்தனை தூரம் அரசியல் ஆகாது என்பதால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன். அல்லது யாராவது
அவர்கள் பிளாகிலே இடம் கொடுத்தால் எழுதுகிறேன் )

Nov 8, 2003

பகுப்புகள்: RKK · arasiyal

peN ezuththaaLarkaLil sivasankari- pAlanggaL

நவம்பர் 6, 2003 · கருத்துத் தெரிவிக்கவும்

சகோதரிகளுக்கு மத்தியில் ஒற்றை பிள்ளையாய் ஆண்பிள்ளையாய் இருப்பதில் பல
சங்கடங்கள் உண்டு என்றாலும், அதிலே முக்கியமானது, பெண் எழுத்தாளர்களை
படித்து ஆகவேண்டிய சூழ்நிலை ஏற்படுவதுதான். சொந்த விருப்பு வெறுப்புகள் தோன்றும் வரையிலும், நம் அருகாமையில் இருப்பவர்கள் தான் நமக்கு முன்மாதிரியாக இருக்கிறார்கள். அந்த சூத்திரத்தின் படி, நானும், என் அருகாமையில் இருந்தவர்கள் போலவே சிவசங்கரி,லக்ஷ்மி,இந்துமதி,அனுராதா ரமணன், உஷா சுப்ரமணியன் ரமணிசந்திரன் போல உத்தமமாக எழுத ஆட்களே இல்லை என்று நினைத்திருந்தேன்.

அபிப்ராயங்கள் என்பது ‘ கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டது ‘ என்ற முத்திரையுடன் தான் நம் மனதில் வந்து தங்குகின்றன. ஆனால் அது அப்போது நமக்கு தெரிவதில்லை. அபிப்ராயங்கள் மாறும்போது, முன்பு நினைத்ததை எண்ணி, சில சமயம் சிரிப்பு வரும். சில சமயம் வெட்கம்.

முந்தைய பத்தியில் நான் குறிப்பிட்ட எழுத்தாளர்கள் எல்லாம் எங்கள் இல்லத்தின் household names. ஒரு தீபாவளி அன்று காலையில் வாசந்தியின் மூங்கில் பூக்கள் என்ற நாவலை வாசித்தது நினைவில் இருக்கிறது. வடகிழக்கில் நடக்கும் கதை. அதே போல ஒரு சமயம், தரையில் இறங்கும் விமானங்கள். கணவன், மனைவி மைத்துனன் மூவருக்குமான உறவினை நுணுக்கமாகச் சொல்லும், இந்துமதியின் கதை. இரண்டு எழுத்தாளர்கள் சேர்ந்து எழுதிய ‘இரண்டு பேர்’ (சிவசங்கரி & இந்துமதி ) உஷா சுப்ரமணியனின் ஒரு குறுநாவல், அனுராதா ரமணனின் தொடர்கதைகள். அமுதசுரபியில் ரெகுலராக வரும்.

இளவயசில் படித்த புத்தகங்களை மீண்டும் பார்க்க நேர்ந்தால், சும்மா எடுத்து ஒரு புரட்டிப் பார்க்கத் தோன்றும். அப்போது, சே இதையெல்லாமா படித்திருக்கிறோம் என்று தோன்றுவதும், அடடா, இதையெல் லாம் அந்த காலத்திலேயே படித்திருக்கிறோமே என்று காலரை உயர்த்தி விட்டுக் கொள்வதும் அந்த அந்த எழுத்தாளரைப் பொறுத்தது.

மற்றெல்லாரையும் விட சிவசங்கரியை சற்று அதிகமாகவே பிடிக்கும். இவரது கதையில் வரும் பல பாத்திரங்கள் தீரா வியாதியஸ்தராக இருப்பார்கள். துயரங்கள், புதுவிதமான நோய்கள் என்று அடிக்கடி வரும். அந்த sympathy aspect , அப்போது ரொம்பவும் பிடித்திருந்தது. லிபரலாக எழுதுகிறார் என்று நினைத்திருந்தேன்.

அந்த காலகட்டத்திலே, அவர் பத்திரிக்கைகளிலே சிறுகதைகளும், தொடர்கதைகளும் எழுதி வந்து,
பிரபலமாக இருந்தார். அவரது சிறுகதைகளில் இன்னும் பசுமையாக நினைவிலிருப்பது ஸ்டெப்னி என்ற சிறுகதை. குமுதத்தில் வந்தது. ஹாஸ்டலில் தங்கிப் படிக்கும் மகளின், பிரிவில் வாடும் ஒரு தாய், தன் மகளின் வயதை ஒத்த அண்டை வீட்டுப் பெண்ணின் மீது அதீதமான அன்பு செலுத்துகிறாள். லீவுக்கு மகள் ஊருக்கு வரும் போது, அந்த தாய், அண்டை வீட்டுப் பெண்ணை அலட்சியம் செய்யும் போது, தான் ஒரு ஸ்டெப்னி மட்டுமே என்று அந்த அண்டை வீட்டுப் பெண் உணர்வதுதான் கதை. இதற்குப் பிறகும் பல கதைகள். பல தொடர்கதைகள். 47 நாட்கள், கப்பல் பறவை, அவன், பாலங்கள் என…

இதிலே பாலங்கள் மிக முக்கியமானது. இது தொடர்கதையாக வந்த போது, மூன்று நான்கு பேர் படிக்கும் வரை , நகம் கடித்துக் காத்திருந்து, பதை பதைப்புடன் படித்திருக்கிறேன். மூன்று வெவ்வேறு காலகட்டத்தில் நடக்கும் கதைகளை தொடராக எழுதியிருப்பார். 1907-1931., 1940-1964, 1965-1985 என்ற மூன்று காலகட்டத்தில் நடக்கும் மூன்று வெவ்வேறு கதைகளின் மைய இழையானது , பாட்டி, பேத்தி என்ற உறவுமுறைக்குள் ஏற்படும் தலைமுறைசிக்கல் தான். ஒரு வாரம் ஒரு கதை. இரண்டாவது வாரம் இரண்டாவது கதை, மூன்றாவது வாரம் மூன்றாவது தலைமுறை என்ற ரீதியில் என்று வந்தாலும், குழப்பம் இல்லாமல் இருக்கும். முதல் தலைமுறைக் கதையில் வரும் ஏகப்பட்ட விவரங்கள் வரும், ஒரு பிராமணக் குடும்பத்தில் நிகழும் பால்யக் கல்யாணம் (பெண்ணுக்கு ஏழு வயது, மாப்பிள்ளைக்கு 11 வயது) , பிள்ளை பெறுதல், சடங்குகள், சம்பிரதாயங்கள்,நுணுக்கமான குறிப்புகள் என்று ஏராளமாக வரும். இவை எத்தனை தூரம் ஆதென்டிக் என்று தெரியவில்லை,.என்றாலும் படிக்க சுவையாயிருந்தது. இம்மாதிரி சடங்கு சம்பிரதாயங்களில் இருந்து விலக யத்தனிக்கும் இரண்டாவது தலைமுறையின் கதை, அவற்றை அறவே ஒழித்துக் கட்டும் மூன்றாவது தலைமுறையின் கதை என்று முப்பத்து நான்கு வாரங்கள் வந்த தொடர். வித்தியாசம் காட்ட, முதல் கதைக்கு கோபுலுவின் ஓவியம் ( முதல் தலைமுறைக் கதையில் வரும் குட்டிமாப்பிள்ளையையும், குட்டியூண்டு பட்டமாவையும், விவாகத்துக்காக அப்பாக்கள் தங்கள் தோளில் தூக்கி வைத்துக் கொண்டிருக்கும் ஓவியம், இன்னமும் மனசிலேயே நிற்கிறது) இரண்டாம் தலைமுறைக் கதைக்கு மணியம் செல்வன், மூன்றாவது தலைமுறைக்கு, ஜெயராஜின் ஓவியம்.

இந்தக் கதையை மீண்டும் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சும்மா காலச்சுவடுவையும், உயிர்மையையுமே, அசோகமித்திரனையும் மட்டுமே படித்துக் கொண்டிருந்தால், உடம்புக்கு ஏதாவது தொந்தரவு செய்யப் போகிறதே என்று ஒரு சேஞ்சுக்காக, முதல் அத்தியாயத்தை படித்தால், முழுக்கதையையும் படிக்கும் படி நேர்ந்துவிட்டது. முதலில் படித்த போது இருந்த சுவாரஸ்யத்துக்கு கொஞ்சமும் குறைவில்லாமல், தற்போதைக்கும் அதே போல இருந்தது.

பாலங்கள் மட்டும்தான் அப்படியா அல்லது முன்பு விரும்பிப் படித்த அவரது மற்ற கதைகளும் அப்படித்தானா என்று, நேரம் கிடைத்தால் சோதித்துப் பார்க்க வேண்டும்.

பகுப்புகள்: RKK · ilakkiyam

வாழ்வை திசை திருப்பிய கணங்கள்.

அக்டோபர் 29, 2003 · கருத்துத் தெரிவிக்கவும்

தங்களுக்கு விருப்பமான வேலையைச் செய்வது இன்ஷ¥ரன்ஸ் ஏஜெண்ட்டுகள் மட்டும்தான் என்று ‘ஒருத்தர்’ சொல்வார்.

கல்லூரியில் படித்து விட்டு, வேலை என்ற ஒன்றை பார்த்தாகவேண்டும் என்ற நினைப்பு வந்த பின், சென்றது ஒன்றிரண்டு நேர்முகத்தேர்வுகள்.

ஒன்று சத்யம் தியேட்டர் பக்கத்தில் இருந்த ‘ தமிழ் கம்ப்யூட்டர் ‘ என்ற பத்திரிக்கை அலுவலகம். எனக்கு எழுதத் தெரியாது . ஆனால் படித்தது கணிணி என்பதால், சும்மா கல்லை விட்டுப் பார்க்கலாம் என்று சென்றேன். அப்போது, குமுதத்தில் கணிப்பொறி பற்றிய தொடர் வந்து கொண்டு இருந்தது. டிஷ்நெட் அதை ஸ்பான்ஸர் செய்து கொண்டிருந்தது என்று நினைக்கிறேன். கன்கார்டியா பல்கலைக்கழகமோ அல்லது வேற ஏதோவைச் சேர்ந்த பேராசிரியர், ராதாகிருஷ்ணன் ( என்று நினைக்கிறேன்). அவர் காஞ்சியை சேர்ந்தவர் என்றும் நினைவு.

நேர்முகத்திலே, நமக்கு தோதான விஷயத்துக்கு, அவர்களை இழுத்து வருவது முக்கியம் என்பது எனக்கு ஏற்கனவே சொல்லப் பட்ட பாடம். குமுதம் கட்டுரையைப் பற்றி லேசாக போகிற போக்கில் குறிப்பிடவும், அவர் ஆர்வமுற்று, அது தொடர்பாக சில கேள்விகள் கேட்க, கிட்ட தட்ட பத்திரிக்கையுலகில் புகுந்து விட்டேன் என்றே நினைத்தேன். பேட்டி முடிந்த போது, எலெக்ட்ரானிக்ஸ் ·பார் யூ ‘ என்ற ஆங்கில சஞ்சிகையில் இருந்து ஒரு வியாசத்தை மொழி பெயர்த்துக் கொண்டு வரச் சொன்னார். இரண்டு நாள் அவகாசமும் கொடுத்தார்.
அவர்தான் அந்த பத்திரிக்கையின் எடிட்டர் என்றும் தெரிந்தது. எனக்கு அப்போதே, தொரந்தோ வெங்கட்,இராம.கி. ஐயா போன்றவர்களின் நட்பு இருந்திருந்தால், அவர்கள் உதவியுடன் ஒழுங்காக மொழிபெயர்த்துக் கொடுத்து, எனக்கு வேலையும் கிட்டி இருக்கும். அவர்கள் இருவரும் எனக்கு ஏன் முன்னமே அறிமுகமாகவில்லை என்று மிகத் தாழ்மையுடன் அவர்களை பார்த்துக் கேட்கிறேன்.

பிறகு, இன்னொரு கணிப்பொறி இதழ் ( ஆங்கிலம் ) dataquest ஆ அல்லது pcworld ஆ என்று
நினைவில்லை. மவுண்ட் ரோடு குணா பில்டிங், சுவாமிஸ் கேப் பக்கத்தில் ( இந்த ஓட்டலில் மதியம் பன்னிரண்டு, ஒரு மணிக்கு தயிர்சாதம் கிடைக்கும். சாப்பிட்டு இருக்கிறீர்களா? காரட்டெல்லாம் போட்டு அபாரமாக இருக்கும். லேட்டாய் போனால் கிடைக்காது) இருக்கும் கட்டிடத்தில், மூணாவது மாடியில் , ஒரு டை கட்டின அன்பர் பேட்டி எடுத்தார். நான் இதற்கு முன் ஆங்கிலத்தில் ஏதேனும் எழுதியிருக்கிறேனா? என்று கேட்டார். எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்கும் என்று எனக்கு தெரியும். இரண்டு பேப்பர் கட்டிங்குகளை காட்டினேன். சபரிமலையில் மகரவிளக்கை , பித்தலாட்டம் என்று ஒருத்தர் week இல் எழுதியிருந்ததைக் கண்டித்து நான் எழுதி, மறுவாரம் பிரசுரமான ஒரு கடிதம் ( தலைப்பு, it is not hoax), மந்தைவெளி பஸ்ஸ்டாண்டில், மழைநாளில் தண்ணீர் தேங்குவதைப் பற்றியும் ,அதன் தீமைகளைப் பற்றியும் நான்
அரைப்பக்கத்துக்கு எழுதி, அதில் இருந்த ஒன்பது வரிகளை மட்டும் பிரசுரித்த ‘தி ஹிந்துவின்’ கட்டிங்கையும் ( தலைப்பு நினைவில்லை) எடுத்து நீட்டினேன். இரண்டு விரல்களால் ( ·போர்செப்ஸ் மாதிரி ) எடுத்து, தன் பேட் மேல் வைத்துக் கொண்டார். டெல் மீ அபவுட் யுர்செல்·ப் என்றார். அந்த கேள்விக்கு நான் அளித்த பதில் தான் எனக்கு அந்த வேலையை கிடைக்காமல் செய்து விட்டது.

ஒரு மாதத்துக்குள்ளாகவே, மூன்றாவதும் கடைசியுமான நேர்முகம். அது அத்தனை சுவாரஸ்யமில்லாதது. போனேன். கேட்டார்கள். பதில் சொன்னேன். வேலை கிடைத்து விட்டது. அதுவும் ஒரு பத்திரிக்கை வேலைதான். ஆனால்,அந்த பத்திரிக்கை, வாழைப்பழம் நிரோத் இன்னபிறவற்றுடன், கடைகளில் கிடைக்காது. அதிலே தொடர்கதைகள் வராது. கூட ஷாம்பூவும், பொடிமட்டையும் இலவச இணைப்பாகக் கிடைக்காது. பொருளாதாரம் தொடர்பான, ஒரு ஆங்கில ·பார்ட்நைட்லி. பல ஊர்களுக்கும் சேர்த்து நான் தான், நிருபன், ரிப்போர்ட்டன். காஷ்மீரமும்,, வடகிழக்கும் தவிர்த்து அத்தனை மாநிலங்களிலும் பயணம் . பல சுவாரஸ்யமான , நினைவுகள்
சம்பவங்கள்.

கையைக் கட்டி ( கூடவே டையை கட்டியும் ) வேலை பாத்தது போதுண்டா சாமி என்று, ஒரு சின்ன, சொந்த கல்லாப் பெட்டி முன், உட்காரும் அந்த விருப்பம் என் மனதிலே எந்த கணத்தில் தோன்றியிருக்கும் என்று நினைத்துப் பார்க்க எப்போதும் முயற்சி செய்வேன்.

எப்போதும் தோல்விதான்.

பகுப்புகள்: RKK