இரண்டு வருடங்களுக்கு முன்பு, சுஜாதா, கற்றதும் பெற்றதும் தொடரில்,இருத்தலியம் பற்றி சில குறிப்புகள் எழுதினார். ரவி ஸ்ரீனிவாஸ் அதன் மீது தன் கடுமையான விமர்சனத்தை வைக்க, பின்னூட்டப் பெட்டியிலே விவாதங்கள் சக்கை போடு போட்டன. அந்த விமர்சனத்தை, ரவிஸ்ரீனிவாஸ், ஆனந்த விகடனுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று பலரும் கேட்டுக் கொண்டனர். ஒரு வேளை, அக்கடிதம், சுஜாதாவின் பார்வைக்குக் கிடைத்திருந்தால், தொடரின் அடுத்த பகுதியில் ஒரு விளக்கம் தர முனைந்திருந்தால் எப்படி எழுதியிருப்பார் என்று கற்பனையாக ஒரு மறுமொழி எழுதியிருந்தேன். [ iamsorry என்ற புனைப்பெயரில்]. அது இங்கே
************
//ஒருவேளை ஏதாவது அதிசயங்கள் நேர்ந்தால், அடுத்த வார க.பெ.யில் ஒரு வரி வரலாம்//
சென்ற வாரம் நான் எழுதிய கட்டுரைக்கு, பிரபு சீனிவாசன் என்ற ஒரு அன்பர், ஏகதேசத்துக்கு பூச்சி பூச்சியாக ஹைப்பர் லிங்க்குகள் எல்லாம் கொடுத்து மறுப்புக் கடிதம் எழுதியிருந்தார். சில அன்பர்கள் தொலைபேசினார்கள். வழக்கம் போலவே அதை என் ரீசைக்க்கிள் பின்னில் சேகரம் செய்தேன். இது போன்ற தாக்குதல்கள் எனக்குப் புதிதல்ல. i provide an easy target. கணையாழி காலத்தில் இருந்தே, முடிச்சவிக்க வா என்று வெண்பா எழுதும் ராயப்பேட்டை பாலுக்களை எல்லாம் கடந்து தான் வந்திருக்கிறேன். கடிதத்தின் தொனியில் இருந்தே, இவர்களுடைய உள்நோக்கம் என்ன என்று தெரிந்துவிடுவதால், எனக்குக் கோபம் வருவதில்லை. விகடன் போன்ற ஒரு வெகுஜன இதழில் எழுதுவதால் நேரும் occupational hazard இது என்பதைத் தெளிவாகத் தெரிந்து வைத்திருப்பதால், பதிலுக்கு கோபம் காட்டாமல் அமைதியாக இருக்க முடிகிறது. இலக்கிய உலகத்தில், வழிப்போக்கர்களிடம் எல்லாம் என்னளவுக்கு யாராவது தர்ம அடி வாங்கி இருப்பார்களா என்பதை, சோஷியாலஜிகல் பர்ஸ்பக்ட்டிவில் வைத்து யாராவது ஆராய்ச்சி செய்தால், அவருக்கு பி.எச்.டி பட்டத்துக்கு பரிந்துரை செய்கிறேன். விருப்பமிருப்பவர்கள் ரிப்ளைகார்டில் எனக்கு எழுதவும்.
உள்ளம் கேட்குமே படத்துக்கு ஒளிப்பதிவாளர் கம் இயக்குனர் ஜீவாவுடன் பணிபுரிந்தது ஒரு நல்ல அனுபவம் ( இவர் இயக்குனர் வஸந்தின் மைத்துனர் என்ற விஷயம் ஆருக்காவது தெரியுமோ? )…blah blah blah………
************
நல்ல படங்கள் வருவதில்லையா, நாம் பார்ப்பதில்லையா?
செப்டம்பர் 19, 2008 · 7 மறுமொழிகள்
பத்ரியின் பதிவுக்கான பின்னூட்டமாக எழுதியது நீண்டுவிட்டதால், இங்கே தனி இடுகையாக….
இதழியல், எப்படி, பெரு ஊடகம், சிற்றிதழ்கள் என்று இரு கூராகப் பிரிந்து நிற்கின்றதோ, அதே போலத் தான் திரைப்படங்களும்.
பதிவிலே நீங்க (பத்ரி) சொன்னது போன்ற, வரலாற்று நிகழ்வுகளை, குறும்படங்களாக அல்லது விவரணப்படங்களாகத் தயாரிக்கத்தான் வாய்ப்பிருக்கிறதே தவிர, பெருவாரியான மக்கள் பார்க்கும் மக்கள் சினிமாவாகத் தயாரிக்கப்பட வாய்ப்பே இல்லை. அப்படியே தயாரிக்கப்பட்டாலும், அரசியல் குறுக்கீடுகள், தணிக்கை போன்ற அதிகாரக் குறிக்கீடுகள் தாண்டி அரங்குக்கு வர வாய்ப்பு மிகவும் குறைவு. அப்படியே அரங்குக்கு வந்தாலும், அதைப் பார்ப்பதற்கான மக்கள் குறைவு.
சினிமா என்கிற ஊடகத்தை, வரலாற்று நிகழ்வுகள், ஒடுக்குமுறைகள், அரச பயங்கரவாதம் ஆகியவற்றைப் பதிவு செய்வதற்கான ஊடகமாக மாற்ற நிறைய மெனக்கெட வேண்டியிருக்கும். அதற்கு யாரும் தயாராக இல்லை.
சில வருடங்களுக்கு முன்பு, நாராயண் எழுதிய பதிவு ஒன்றிலே என்னுடைய பின்னூட்டத்தின் ஒரு பகுதி
பெரு ஊடகத்தின் பக்கமே வராமல், நல்ல ஆவணப்படங்கள் , விவரணப்படங்கள் வந்து கொண்டிருக்கின்றன. கடந்த சில ஆண்டுகளில் அப்படி வந்து, குறிப்பிட்ட சில வட்டத்துக்குள் மட்டும் திரையிடப்பட்டு, அவர்களின் கவனத்தைக் கவர்ந்த பல படங்க்ள் உண்டு. ஆனால், அவற்றை நாம் தான் தேடிச் சென்று பார்க்க வேண்டியுள்ளது. காரணம், நிதர்சனம். அவற்றை நம்மிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியில், இன்னும் நான்கைந்து படங்களை அவர்கள் தயாரிக்கலாம்
யமுனா ராஜேந்திரன் எழுதி, ஒரு இணையக்குழுவில் பிரசுரமான மடல் ஒன்றை, என்னுடைய சேமிப்பில் இருந்து இங்கே பகிர்ந்து கொள்கிறேன். அது 2001 இலே நடந்த முதல் உலகத் தமிழ்த் திரைப்பட விழாவிலே திரையிடப்பட்ட படங்களின் பட்டியல். பாருங்கள். நல்ல படங்கள் வருவதில்லையா அல்லது அவை வரும்போது நாம் கவனிப்பதில்லையா என்று சொல்லுங்கள்.
வேர்ல்டு மூவிசுக்கு இடையில் இந்தப் படங்களையும், தேடிப் பிடித்துப் பார்த்து இன்புறலாம் (?) தானே?
Update : New Jersey Short Film & Documentary Film Festival . – a post from Boston Bala’s blog archives
பகுப்புகள்: Vellithirai · my comments