Prakash’s Chronicle 2.0

‘flashback’ பகுப்பில் உள்ள வரவுகள்

uLLivayan perungaya dappa

மார்ச் 31, 2007 · 1 மறுமொழி

ரிச்மண்ட் தமிழ்ச் சங்கர் ரிச்மண்ட் சங்கத் தமிழர் மண்டையை பிச்சுக் கொண்டிருக்கிறார் என்று இப்போதுதான் தெரிந்தது.

பெருங்காய டப்பா யார் என்று சங்கத் தமிழர் போலவே எனக்கும் தெரியாது. டப்பாவே சொன்னது இது

சாந்த சொரூபன் தகர டப்பா (Tin Drum) என்கிற மொழியியல் அறிஞரைத் தெரியாதவர்கள் தமிழ் இணைய உலகில் வெகுசிலரே எனலாம். அவர் எழுதுவதை நிறுத்தி ரொம்ப காலம் ஆகிறது என்பது தெரிந்த விசயம் தான்.

ஆனால், உங்களை எல்லாம் மகிழ்விக்க தமிழ்நெட்டில் இப்போது புதிதாக உள்ளிவாயன் பெருங்காய டப்பா (Hing Drum) என்கிற பாபாஜி அவர்கள் எழுந்தருளியிருக்கின்றார். அவரது வருகை நாம் எல்லோரும் பெற்ற பெரும்பாக்கியமே எனலாம்.

பொதுவாக, துணுக்குப் படிப்பவர்கள், ஒருவித மெத்தனமான ரிலாக்ஸ்டு மனதோடு படிப்பார்கள். அவர்களே, கவிதை என்று ஒன்றைக் கையில் கொடுத்தால், ஏதோ அட்டென்ஷனில் தேசிய கீதத்தைக் கேட்பதுபோல, பீடத்தில் வைத்து சூடத்தைக் கொளுத்தாத குறையாக, பயபக்தியோடு ரொம்பவே மரியாதையோடு படிப்பார்கள். இது சகஜம். மரபுக்கும் கவித்துவத்திற்கும் நாம் கொடுக்கும் மரியாதையின் அடையாளமே அது.

பெருங்காய டப்பாவின் கவிதைகள், தமிழினத்தை சீர்திருத்துவதற்காக எழுதப்பட்டவை என்பதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை. எனவே, பெருங்காய டப்பாவின் கவிதைகளை படிப்பதற்கு முன், “மனசே, ரிலாக்ஸ் ப்ளீஸ்” என்று சொல்லிவிட்டு, துணுக்குப் படிப்பதுபோல, ஜாலியாக ரசித்துப்படியுங்கள். அதில் வரும் சத்தமும் சந்தமும் தானாகவே உங்களை ஆட்கொள்ளும்.

பெருங்காய டப்பாவின் மூன்று கவிதைகளை இன்று அனுப்புகிறேன். மற்றவற்றை
இன்னொரு நாள் அனுப்புகிறேன். உங்களது விமரிசனங்கள் எதனையும் தாங்கும் வலிமை பெருங்காய டப்பாவுக்கு உண்டு என்று நம்பலாம்.”வாசமில்லா டப்பாயிது… வசந்தத்தைத் தேடுது…” என்று பாடினாலும் அசமந்தமாகக் கேட்டுக்கொள்ளும்.

எதையும் தாங்கும் இதயம்கொண்ட டப்பாயிது;
எளிதில் நொறுங்கிப் போகா டப்பாயிது;
வெள்ளத்தால் அழியாத, வெந்தணலால் வேகாத,
மோப்பக் குழையா பெருங்காய டப்பாவே!

மேற்படி விஷயம்,காப்பிக் கடையில் நான்கு வருடங்களுக்கு முன்பு சொன்னது …

*************

டப்பாவின் மற்றொரு கவிதை

உலகமாதா வாத்து (டெடிகேட்டட் டு ஆல் திண்ணை ரைட்டர்ஸ்)
——————————————————

யுகம் புரண்ட புருஷன் அவம் திரண்ட கருடன்
சூக்மதாரி அடங்காப்பிடாரி இயமம் நியமம்
சோதிடம் சொல்லா நித்ய ஞான கோவணதாரி
காட்டாரி மலையாளபகவதி வேதசகாயி
சின்னக்கருப்பி மஞ்சுள நாட்சி
சரணவ மால ராஜநாயகி அம்மா நரநர
பாவி கந்த சிவம் இடப்பாகி ஜிலேபி
குலேபகாவலி ஆதரி நீயெனை
அம்மா படிந்தேன் சரணம்
ஹரி போல் ராம் ராம்
கோவண்ணப்பால் ராம நமோ நமோ
மலமறு ராட்ஸசி சூத்திரதாரிதன்
சூல்தரு மோகி சரவணத்தாயே
ஜெய ஜெய ஜெய ஜெய
உலகம் வாழ அருள்பொழி மாதா!
___

உள்ளிவாயன் பெருங்காயடப்பா.

பகுப்புகள்: flashback · ilakkiyam

Wish I had written

மார்ச் 20, 2007 · 6 மறுமொழிகள்

மறக்கமுடியுமா?
——————–

மூணாம்வகுப்பிலே
மூக்குத்தோண்டியதை
மறக்கமுடியுமா?

வீடுபெருக்கும்
முனியம்மாவைப் பார்த்து
விஸில் அடித்ததை
மறக்கமுடியுமா?

ஆத்தங்கரையிலே
அல்வா அவுக் அவுக்கின்னு தின்னு
பேதியாகி கோரைப்புல்லு பின்னாடி
குந்தினதை மறக்கமுடியுமா?

ஏழாம் கிளாசு வாத்தி
இங்கிபிலீஸ¤ கத்துத்தந்தக்கா,
எலந்தைப்பழம் தின்னதை
மறக்கமுடியுமா?

சினிமா போய்
இரவிலே சைக்கிளிலே
நிலவிலே திரும்பி வந்ததை
மறக்கமுடியுமா?

இப்போது,
எட்டாத தொலைவிலே
ரிச்மண்டிலே
மண்டிபோட்டு
கம்பியூட்டரிலே
மாங்குமாங்கு
தேங்கா ஸைஸிலே
ஜாவா எழுதினாலும்
இஸ்மயில் பாவா
மூணாம் வகுப்பிலே
மூக்கணாம்ப்பட்டி முனிசிபல் ஸ்கோலிலே
மூக்குத் தோண்டியதையும்
முனியம்மாவையும்
மறக்கமுடியுமா?

அதனால், தீர்மானத்துக்கு வந்தாச்சு.
லே ஆப்போ லேத் வர்க்கோ
ரிச் மண்டு ஜாப்பை விட்டுவிட்டு
மூன்றாம் வகுப்பிலே எலந்தைப்பழம் தின்னு
திரும்ப இங்கிபிலீசு படிக்க
பாபாக்கு ஹாயா விஸில் அடிக்க
கோரைப்புல் கிராமத்துக்குக்
கோவணம் கட்டப் போகிறேன்.

முனுசாமி! முனியம்மா!!
வட் எவர் யு டூ, கிவ் இட் அப்.
பிளீஸ் ரிட்டர்ன் பக் டு
யுவோர் பழைய பாத்திரம்.

ஜாவாவே உன் உப்பு வாய்க்கு
ஒரு மூட்டை அல்வா.

கண்டினியூட்டி ஸாட்!
டேக் டென் டு த பவர் இன்பினிட்டி!
ஆக்ஸன் பிளீஸ்!!

- உள்ளிவாயன் பெருங்காயடப்பா.

[நன்றி : பழைய காப்பிக் கடை]

பகுப்புகள்: flashback

முதன் முதலாக…..

மார்ச் 16, 2007 · 4 மறுமொழிகள்

சைட் அடித்த அனுபவத்தைப் பற்றியோ அல்லது காதல் கடுதாசு கொடுத்த அனுபவம் பற்றியோ எழுதப்போகிறேன் என்று நினைத்து வந்தவர்கள் சற்று ஒதுங்குங்கள். இது வேற மேட்டர்.

**********

1986. ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். ப்ரேயர் முடிந்ததும் ( Jesus loves me! this I know, For the Bible tells me so.. என்ற பாட்டைத் தான் பாடுவார்கள். யாருக்காவது இதன் முழு வடிவம் தெரியுமா? ). பிரின்சிபல் அறிவிப்பு செய்தார், ” இன்று நம் பள்ளிக்கு கம்ப்யூட்டர் வந்திருக்கிறது” என்று.

*******

பிரின்சிபல் அலுவலகத்துக்கு பக்கத்தில் இருந்த அறையில் தான் கம்ப்யூட்டர்கள் வைக்கப்பட்டிருந்தன. கண்ணாடிக் கதவெல்லாம் போட்டு, ஏர்கண்டிஷன் செய்யப்பட்டு, பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் மட்டும் உள்ளே இருந்தார்கள். உணவு இடைவேளையின் போது உள்ளே எட்டிப் பார்த்தோம். அந்த வஸ்து குட்டியாக இருந்தது. பச்சை நிறத்தில் எண்கள், எழுத்துக்கள். கீபோர்ட், மானிட்டருடன் ஒட்டிக் கொண்டு, வினோதமாக இருந்தது. அது என்னவெல்லாம் செய்யும் என்று கேட்டறிந்த போது, சில காலம் முன்பு விக்ரம் படம் பார்த்ததில் கம்ப்யூட்டர் பற்றி மனதில் ஏற்பட்டிருந்த பிம்பம் சரிந்தது.

*******

மூன்று வருடங்களுக்குப் பிறகு, உயிரியியல் தொல்லையில் இருந்து தப்புவதற்காக , கணிப்பொறியியல் எடுத்ததில், இரண்டாம் நாள் லாபில் தான், கணிப்பொறியை கிட்டத்தில் பார்க்கக் கிடைத்தது. விடுமுறையில் , என்னைப்போல ஊர் சுற்றாமல், வேர்ட்ஸ்டார், லோடஸ், டிபேஸ் போன்ற போன்ற தில்லாலங்கடி சாஃப்ட்வேர்களைக் கற்றுத் தேர்ந்து, மறக்காமல் சான்றிதழ்களைக் கக்கத்திலேயே வைத்துக் கொண்டு சுற்றும் சி.பழனியப்பன் தான், இது இது இன்னது என்று பாலபாடம் நடத்தினவன். அப்போது வன் தகடு எல்லாம் கிடையாது. கணிப்பொறியில் சேமித்து வைக்கவெல்லாம் முடியாது. நான் ஸ்டிக் தவா போல இருக்கும் ஐந்தரை இஞ்ச் ஃப்ளாப்பி தகடு மூலமாகத்தான் ஆபரேடிங் சிஸ்டத்தை லோட் செய்து , வேலை செய்து விட்டு இன்னொரு நான் ஸ்டிக் தவாவிலே சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும். இரண்டில் பெரிய எண் எது என்று கண்டு பிடிப்பது, கூட்டல் கழித்தல் போன்ற கணக்குகளைப் போடுவது ஆகிய அல்ப சொல்ப வேலைக்கெல்லாம் எதுக்குக் கணிப்பொறி என்று தோன்றியது நிசம்.

********

கணிப்பொறி மேஜர் என்பதால், கல்லூரியில் தான் முதன் முதலாக எனக்கே எனெக்கு என்று கணிப்பொறி கிடைத்தது. முழுக்க முழுக்க யூனிக்ஸ் ஆபரேடிங் சிஸ்டம். சடார் சடார் என்று க்ராஷ் ஆகும் விண்டோஸ் இயங்குதளத்துடன் மல்லுகட்டும் போது, அந்த காலத்திலேயே, அதிலே இருந்த வசதிகளும், வேகமும், ஞாபகத்துக்கு வருகின்றது. கல்லூரிக்குப் பிறகு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. முதன் முதலாக வண்ணத்திரையைப் பார்த்ததும் அங்கேதான். AT 386 கணிப்பொறி அப்போதுதான் அறிமுகம் ஆனது.

*******

சென்னையில் அப்போது ஸ்டெர்லிங் கம்ப்யூட்டர் என்ற நிறுவனம் பிரபலமானது. மெர்க்கண்டைல் வங்கி விவகாரத்தில் அடிபடும் சிவசங்கரன் அவர்களின் நிறுவனம். Siva AT என்ற பெயரில் கணிப்பொறிகளை அசம்பிள் செய்து சென்னையைக் கலக்கிக் கொண்டிருந்தார்கள். துட்டு கொழுத்த நண்பன் ஒருவன், கணிப்பொறி வாங்க வேண்டும் என்று என்னையும் அழைத்துக் கொண்டு போனான். விசாரித்த போது, நிகர விலை, அறுபத்தைந்தாயிரத்துச் சொச்சம் என்றார்கள்.

வாங்கினான்.

******

கணிப்பொறி தொடர்பில்லாத வேலை என்பதால், டைம்ஷேரிங் அடிப்படையில் தான் , அலுவலகத்தில் கணிப்பொறி கிடைக்கும். வேலை செய்கிற அனைவருக்கும், ஆளுக்கொரு கணிப்பொறி வாங்கித் தர வேண்டிய அவசியம் இல்லாத வேலைச் சூழ்நிலை. தொலைத்தொடர்புத்துறை இணையச் சேவையை அறிமுகப்படுத்திய சில மாதங்களில், அலுவலகம் சார்பாக, க்யூவில் நின்று விண்ணப்பப் படிவம் வாங்கி, பூர்த்தி செய்து அனுப்பிவிட்டு காத்திருந்த போது, வாராது வ்ந்த மாமணி போல இணையம் வந்தது. நூறு மணி நேரத்துக்கு ஐந்தாயிரம் ரூபாய். அந்த வருடம் மார்ச் மாதத்தில்தான் முதன் முதலாக யாஹூ மின்னஞ்சல் முகவரியை உருவாக்கிக் கொண்டேன். icarus1972usATyahooDOTcom. இன்றும் உயிரோடிருக்கிறது. வருடம் 1997.

*****

இது மார்ச் 2007.

*****

பகுப்புகள்: feelingsu · flashback

Blogs in Tamil, A Letter dated May 14, 2003

மார்ச் 12, 2007 · 2 மறுமொழிகள்

ராயர் காபி க்ளப் குழுமத்தில், மாலன் அவர்கள் நான்கு வருடங்களுக்கு முன்பு எழுதிய மடல்,

அன்பு நண்பர்களுக்கு,

இணையத்தில் உலாவுகிறவர்களில் பலர், Blog என்பதைப்பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். நம் எண்ணங்களைப் பதிந்து கொள்ள, பகிர்ந்து கொள்ள, பிரசுரிக்கிற உதவும் இணைய வாய்ப்பு அது. ஆங்கிலத்தில் ஆயிரக்கணக்கில் Blogகள் இருக்கின்றன. தமிழில் நான் அறிந்த வரை அதிகம் இல்லை.

தமிழில் Blogகளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். இது வரை தமிழில் இரண்டு Blogகளை வெவ்வேறு தளங்களில் உருவாக்கியுள்ளேன்.ஒன்று என் எழுத்துக்களை வெளியிடும் Blog.மற்றொன்று தமிழ் ஹைக்கூக்களை வெளியிட.

அவை:

http://maalanblog.blogspot.com
http://tamilhaiku.rediffblogs.com

கணினி உலகைச் சேர்ந்த சிலர் இந்த Blog களைப் படித்து கருத்துக்கள் அனுப்பியுள்ளார்கள். ஆங்கிலththil Blog ஒன்றை வெளியிட்டு வரும் நானறியாத கிங்ஸ்லி என்ற நண்பர் இந்த Blogகளைப் பார்த்து உற்சாகம் அடைந்து அவரது Blogl தமிழில் எழுதிப்பார்த்து இருக்கிறார்.

என்றாலும் பலர் இந்த Blogகளை படிக்க முடியவில்லை என்றும் தெரிவித்திருக்கிறார்கள்.

Blogல் ஆர்வம் உள்ள நண்பர்கள் இந்த இரு முகவரிகளுக்கும் சென்று அவற்றை வாசிக்க முடிகிறதா என்று தெரிவித்தால், தமிழில் Blogகள் உருவாக்கும் முயற்சியைத் தொடர இயலும். தொழில் நுட்ப வல்லுநர்கள் பிரசினைக்குத் தீர்வுகளையும் சொல்ல முன்வந்தால் மகிழ்ச்சி அடைவேன். இணையத்தின் எல்லா நவீன அம்சங்களுக்கும் நாம் தமிழை எடுத்துச் சென்று தமிழ் எந்தவகையிலும் எவருக்கும் சளைத்ததல்ல என்பதை நிறுவக் கடமைப்பட்டுள்ளோம்.

நன்றி

இந்த நான்கு வருடங்களில் எத்தனை மாற்றம்? பிரமிப்பாக இருக்கிறது

பகுப்புகள்: Blogs · flashback