வெட்டிப்பயல் பாலாஜியின் இடுகைக்கு எழுதிய மறுமொழியை, சௌகரியத்துக்காக இங்கே சேமிக்கிறேன்.
*******************
உங்களை எல்லாம் தமிழ்மணம் நல்லா கெடுத்து வெச்சிருக்கு
. முதல்ல சில தகவல்கள்.
1. இந்திய மொழிகளிலே, தமிழிலே மட்டும் தான் , இது போன்ற சேவைகளைத் தரும் திரட்டி உண்டு. blogger என்ற மெகா வலைப்பதிவுச் சேவையில் கூட பின்னூட்டங்களைத் திரட்டும் வசதி கிடையாது.
2. தமிழ்மணம் இல்லாத ஒரு சூழ்நிலையைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். உங்க பதிவுக்கு வாசகரைத் திரட்டுவதற்குள் நாக்கு தள்ளிவிடும். உதாரணத்துக்கு, புதுசா ஒரு வலைப்பதிவு ஒன்றை ஆரம்பித்து, அதை தமிழ்மணம், தேன்கூடு போன்ற திரட்டிகளில் இணைக்காமல், கொஞ்ச நாள் நடத்திப் பாருங்கள். ரெண்டே நாளில் வாழ்க்கையே வெறுத்து விடும், அதாவது மறுமொழிகள், டிராக்பேக், எல்லாம் எதிர்பார்த்திருந்தால்.
3. இன்றைக்கு இரண்டாயிரத்து சொச்சம் பதிவுகள் இருக்கிற நிலையில், இது போல கேள்வி கேட்கிறீர்கள். இன்னும் இரண்டு வருடங்களில், பத்தாயிரம் பதிவுகளாகப் பெருகி விட்டால், தமிழ்மணம் உயரெல்லை கட்டுப்பாடு விதித்தாலும் விதிக்காவிட்டாலும், பதிவு செய்யும் frequency அதிமாகும் என்பதால் உங்க பதிவு தோன்றிய சில விநாடிகளிலேயே தொபுக்கடீர் என்று கீழே இறங்கிவிடும். அப்ப என்ன செய்வீங்க?
4. தமிழ்மணம் உருவான நோக்கம் உன்னதமானது – உருவான காலத்தில் பக்கத்தில் இருந்து பார்த்திருக்கிறேன் என்ற அடிப்படையிலும், பின்னர் கொஞ்ச நாள் நிர்வாகத்தில் பங்கு பெற்றிருக்கிறேன் என்ற அடிப்படையிலும் சொல்கிறேன். நூறோ என்னமோ பதிவுகள் மட்டும் இருந்த காலத்தில், feed reader, google reader போன்ற சேவைகள் இல்லாத நேரத்தில், தமிழ் வலைப்பதிவாளர்களை ஒன்றிணைக்கும் முயற்சியாகத்தான் துவங்கியதே தவிர, தனிப்பட்ட வலைப்பதிவாளர்களின் பாப்புலாரிட்டியை அதிகரிக்கும் நோக்கத்தில் அல்ல.
4 தமிழ்மணம் திரட்டி வேறு. பூங்கா வேறு. தமிழ்மணம், தன்னுடைய விதிகளுக்கு உட்பட்டு வரும் எல்லாப் பதிவுகளையும் திரட்டும். உள்ளடக்கம் பற்றி புகார் வந்தால் மட்டும், அங்கே மனிதத் தலையீடு இருக்கும். ஆனால் பூங்கா என்பது, வலை இதழ். ஆசிரியரின் விருப்பு வெறுப்புகளுக்கு உட்பட்டுத்தான் வெளிவரும். ஆசிரியர் குழுவின் அரசியல் பற்றி விமர்சிக்க உங்களுக்கு முழு உரிமை உண்டு – எப்படி சோவைப் பற்றி விமர்சனம் செய்கிறோமோ அப்படி-ஆனால், என்னுதைப் போட மாட்டேன் என்கிறார்கள் என்று குற்றச்சாட்டு வைக்க முடியாது.
5. தமிழ்மணம் ஏற்படுத்திக் கொடுத்த, சொகுசுகளால், எவ்வளவு நன்மை ஏற்பட்டதோ, அதே அளவு தீமையும் ஏற்பட்டிருக்கிறது. எந்த கஷ்டமும் படாமல், நாலு வரி கிறுக்கிவிட்டு ( உங்களைச் சொல்லவில்லை பாலாஜி, ஆக்சுவலி நான் உங்க சினிமா விமர்சனங்களோட தீவிர வாசகன்), அதை தமிழ் மணம், தேன்கூடு மாதிரி இடங்களிலே பதிவு செஞ்சுட்டா போதும். டிராஃபிக் என்ன?… பின்னூட்டம் என்ன, ஒவ்வொரு பின்னூட்டம் வரும் போதும், முகப்புப் பக்கத்திலே வருகிற சொகுசு என்ன… அங்க இங்க போய்ப் பாருங்க… வலைப்பபதிவுகளுக்கு டிராஃபிக் வரவெக்கிறது எவ்ளோ சிரமமான காரியம்னு..
6, இறுதியா ஒரு அட்வைஸ்…. பதிவுகளுக்காகத்தான் மறுமொழியே தவிர, மறுமொழிகளுக்காகப் பதிவு அல்ல. பதிவு நல்லா இருந்தால், கண்டிப்பா பட வேண்டியவங்க கண்ணுல கண்டிப்பா படும்… இல்லே, ‘ என் பதிவுக்கு நூத்து சொச்சம் பின்னூட்டம் வரும்,,, அதனாலே நாந்தான் டாப்பு, எப்பவும், தமிழ்மணம் முகப்பில், வலப்பக்க மூலையில் என் பேர் வந்துகிட்டே இருக்கணும்னு சொன்னா… அப்பறம் உங்க இஷ்டம்.
3 பதில்கள் இது வரை ↓
Social Networking - Tamil Blogs, Thamizmanam, Poongaa « Snap Judgment // April 12, 2007 இல் 11:27 பிற்பகல் |
[...] கவனிப்பார்களா?விற்கு, பிரகாஷின் பின்னூட்டத்தைப் பின் தொடர்ந்து… 1. —தமிழிலே [...]
ravidreams // April 13, 2007 இல் 8:29 மு.பகல் |
அனைத்தும் சரி
Poongaa, Thamizmanam - Blogger feedbacks, Woes, Misinterpretations, Explanations « Snap Judgment // மே 10, 2007 இல் 7:29 பிற்பகல் |
[...] Thamizmanam – ‘vettippayal’ Balaji « Prakash’s Chronicle 2.0 [...]